தமிழ்நாடு
கிளப் ஹவுஸ் சேட்டிங்கில் இளைஞருடன் பழகிய இரு பெண்கள்: பரிதாபமாக பலியான இளம்பெண்
கிளப் ஹவுஸ் சாட்டிங் செயலி மூலம் அறிமுகமான 2 இளம்பெண்களை பைக்கில் கூட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்து காரணமாக ஒரு இளம் பெண் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சென்னையை சேர்ந்த 25 வயது இளைஞர் பிரவீன் என்பவர் மூலம் ஐஸ்வர்யா மற்றும் தமிழரசி ஆகிய இரு பெண்களுடன் சாட்டிங் செய்துள்ளார். கடந்த 7 மாதங்களாக சாட்டிங் செய்து கொண்டிருந்த இரண்டு பெண் தோழிகளும் பிரவீனை நேரில் சந்தித்து சென்னை வந்துள்ளனர் .
சென்னையில் லாட்ஜில் அறை எடுத்து தங்கிய பின் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சென்று உள்ளனர். பின்னர் நேற்று நள்ளிரவு புதுச்சேரியிலிருந்து பைக்கில் வந்து கொண்டிருந்த போது கிழக்கு கடற்கரை சாலையில் அடையாறு அருகே வேகத்தடை இருப்பதை கவனிக்காமல் இருந்ததால் பைக்கில் இருந்த மூவரும் தூக்கி எறியப்பட்டனர் .
இந்த விபத்தில் தமிழரசிக்கு படுகாயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பிரவீன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலை நேரத்தில் மிக வேகமாக வந்ததால் வேகத்தடையை கவனிக்காமல் சென்றதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.