Connect with us

இந்தியா

அறுவை சிகிச்சை செய்து 10 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய முதலமைச்சர்: குவியும் பாராட்டுக்கள்!

Published

on

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் 10 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரை காப்பாற்றி உள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

திரிஉரா மாநிலத்தின் முதலமைச்சராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பதவி ஏற்று கொண்டவர் மாணிக் சஹா. இவர் முதலமைச்சராகவும் அரசியல்வாதியாகவும் இருப்பதற்கு முன்னர் 20 வருடங்கள் மருத்துவராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிபுரா மருத்துவ கல்லூரியில் வாய் வழி மற்றும் மார்க்ஸிலோபேசியல் என்ற துறையின் அறுவை சிகிச்சை நிபுணராக 20 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார். இதனை அடுத்து அவரது வாழ்க்கை திசை மாறி அரசியல்வாதி மற்றும் முதலமைச்சர் என்று மாறிவிட்டது.

இந்த நிலையில் திரிபுரா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு வாயில் உள்ள நீர் கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ள நிலையில் இந்த அறுவை சிகிச்சை முதலமைச்சர் மாணிக் சஹா தான் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. இதனை அவரிடம் தெரிவித்த போது அவர் மகிழ்ச்சியுடன் வருகிறேன் என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து நேற்று காலை 9 மணிக்கு மருத்துவமனை சென்ற முதலமைச்சர் மாணிக் சஹா, உடனடியாக மருத்துவர் குழு உதவியுடன் 10 வயது சிறுவனின் வாய்க்குள் இருந்த நீர்க்கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையை செய்தார். அரைமணி நேரத்தில் அவர் இந்த அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு வெளியே வந்த போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

10 வயது சிறுவனை காப்பாற்றுவதற்காக இன்று காலை நான் எந்த விதமான அரசியல் பணிகளிலும் ஈடுபடாமல் நேராக அறுவை சிகிச்சை அரங்கிற்கு வந்தேன். இங்கு அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது. சிறுவன் தற்போது நலமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக நான் பணிபுரிந்த இடத்தில் மீண்டும் சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்துள்ளேன். எனக்கு இதனால் எந்த சிரமமும் இல்லை, மாறாக எனக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பணியையும் விட்டுவிட்டு ஒரு சிறுவனின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதலமைச்சர் மாணிக் சஹாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?