இந்தியா
அந்த பெண் தனக்குத்தானே சிறுநீர் கழித்து கொண்டார்… ஏர் இந்தியா சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம்?
ஏர் யார் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இன்று நீதிமன்ற விசாரணையில் அவர் தான் அவர் மீது சிறுநீர் கழிக்கவில்லை என்றும் அந்த பெண் தனக்குத்தானே சிறுநீர் கழித்துக் கொண்டார் என்றும் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லிக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் சங்கர மிஸ்ரா என்ற பயணி மது போதையில் இருந்ததாகவும் அப்போது அவர் பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்துவிட்டு தனது மர்ம உறுபையும் காட்டிக்கொண்டு இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பயணி விமான நிலைய பணியாளர்களிடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் போதை தெளிந்தவுடன் சங்கர மிஸ்ரா அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் இதனால் பெரிய பிரச்சனை தனக்கு ஏற்படும் என்றும் கூறியது கதறி அழுததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை எனப்படுகிறது.
இருப்பினும் இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானது என்பதும் சமூக ஊடகத்தில் இது குறித்த புகைப்படம் வீடியோ வெளியாகி வைரலானதை அடுத்து ஏர் இந்தியா நிறுவனமே இது குறித்து புகார் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து காவல்துறையினர் சங்கரமிஸ்ராவை கைது செய்து விசாரணை செய்து வந்தனர். இதன்பிறகு தான் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரனுக்கு கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சங்கரமிஸ்ரா தன் மீது தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். நான் அந்த பெண் மீது சிறுநீர் கழிக்கவில்லை என்றும் அவர் தனக்குத்தானே சிறுநீர் கழித்து இருப்பார் என்றும் அவருக்கு 70 வயதுக்கு மேல் ஆவதால் சிறுநீர் தொடர்பான பிரச்சனை இருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் அந்த பெண் மீது சிறுநீர் கழித்து இருந்தால் அந்த பயணியின் பக்கத்தில் உள்ள பயணியும் பாதிக்கப்பட்டு இருப்பார், ஆனால் அவர் எந்த புகாரும் அளிக்கவில்லையே என்றும் அவரது வழக்க றிஞர் வாதிட்டு உள்ளார். இந்த வழக்கின் விசாரணையை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.