தமிழ்நாடு
இதே டெல்டாக்காரர் தான் மீத்தேன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டார்: முதல்வர் ஸ்டாலினை சீண்டும் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக சட்டசபையில் நேற்று டெல்டா பகுதியில் கொண்டு வரப்பட உள்ள நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நானும் டெல்டாக்காரன் தான் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என உறுதியாக தெரிவித்தார். இதனை கிண்டல் செய்யும் விதமாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இது தொடர்பாக டி.ஆர்.பாலு மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறினார். மேலும் முதலமைச்சராக மட்டுமின்றி, நானும் ஒரு டெல்டாக்காரன் என்ற முறையில் அங்கு அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் நிலக்கரி சுரங்க ஏலத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இதே டெல்டாகாரர் தான் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடிய மீத்தேன் திட்டத்தை கொண்டு வருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டார். திறந்து வழிவிட்டார்கள். இப்பொழுது கஷ்டப்படுவதற்கு காரணமே அவர்தான் என்று கூறினார்.













