Connect with us

சினிமா

இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்கிறாரா செல்வராகவன்? திடீரென இந்த ட்வீட் ஏன்?

Published

on

இயக்குநர் செல்வராகவன் திடீரென பதிவிட்டுள்ள ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு ஜீனியஸ் மறுபடியும் விவகாரத்தா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்களை இயக்கி ஹிட் இயக்குநராக மாறிய செல்வராகவன் அந்த படங்களில் ஹீரோயினாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்தார்.

ஆனால், அதன் பின்னர் ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு சமயத்தில் செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிய நிலையில், அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த கீதாஞ்சலி செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட செல்வராகவனுக்கு ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், திடீரென இப்படியொரு ட்வீட்டை இயக்குநர் செல்வராகவன் போட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு என பதறிப் போய் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இயக்குநர் செல்வராகவன் அடிக்கடி ட்விட்டரில் ஏதோ ஒரு தத்துவத்தை சொல்வது போல திடீரென ஒரு ட்வீட் போடுவார். ஆனால், தற்போது அவர், ”தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.” என இப்படியொரு பிரிவு தொடர்பான ட்வீட் போட்டது தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

17 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு இந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி தான் செல்வராகவனின் தம்பி நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து பிரிந்தார். இந்நிலையில், செல்வராகவனும் இரண்டாவது மனைவியை பிரிகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நடிகராக மாறிய நிலையில், அடுத்து செல்வராகவன் ஜி. மோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த திரைப்படம் தனுஷின் வாத்தி படம் தள்ளிப் போனது போலவே அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போயுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?