சினிமா
அதில் என்ன குறைந்து விடப் போகிறோம்? அடுத்த தத்துவ ட்வீட்டை போட்ட செல்வராகவன்!

காதல் கொண்டேன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என பல படங்களை இயக்கி ஜீனியஸ் இயக்குநர் என கொண்டாடப்பட்டார்.
காதல் கதைகளை இவ்வளவு எதார்த்தமாக தமிழ் சினிமாவில் எந்த இயக்குநரும் சொன்னது இல்லை என இன்றளவும் செல்வராகவனின் இயக்கத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு திடீரென கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணிக் காயிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆனால், அதற்கு பிறகு அவர் நடித்த விஜய்யின் பீஸ்ட் படம் தியேட்டரில் முந்திக்கொண்டு வெளியானது. அந்த படத்திலும் செல்வராகவனின் நடிப்பும் வசனமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
கடைசியாக தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான பகாசூரன் படத்தில் ஹீரோவாக நடித்து மிரட்டி இருந்தார் செல்வராகவன்.

ஆனால், அந்த படம் பெரும் சர்ச்சையில் சிக்கிய நிலையில், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியடையவில்லை. நடிகர் விஷாலின் மார்க் ஆண்டணி படத்திலும் இணைந்துள்ளார் செல்வராகவன்.
அடிக்கடி ட்விட்டரில் திடீரென ஏதாவது தத்துவத்தை பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். இந்நிலையில், லேட்டஸ்ட்டாக, ”உலகம் பிறந்த நாள் முதல் கடவுள் யாரையும் கரை சேர்க்க தவறியதே இல்லை. எல்லாம் உங்களின் நம்பிக்கையை பொறுத்தது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு மீள்வோம் என முழு மனதாய் நம்புவோம். அதில் என்ன குறைந்து விடப் போகிறோம் ?” என கடவுள் நம்பிக்கையுடன் ஒரு பதிவை போட்டுள்ளார்.





















