Connect with us

இந்தியா

பூஸ்டர் தடுப்பூசிக்கு விண்ணப்பித்தால் பேங்க் பேலன்ஸ் காலியாகுமா? சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை!

Published

on

பூஸ்டர் தடுப்பூசி போடுபவர்களின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு மோசடியான லிங்க் அனுப்பி அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்யும் கும்பல் இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி போடுபவர்கள் ஆன்லைன் மூலம் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக விண்ணப்பங்கள் பதிவு செய்தவர்களின் செல்போன் எண்ணுக்கு மர்மமான லிங்க் அனுப்பப்படுவதாக அந்த லிங்கை கிளிக் செய்து ஓடிடி எண்ணை மோசடி நபர்கள் கேட்பதாகவும் ஓடிடி எண்ணை தெரியாமல் கொடுத்து விட்டால் அவருடைய வங்கிக் கணக்கில் உள்ள பணம் காலியாக இருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

எனவே பூஸ்டர் டோஸ் போட விண்ணப்பித்தவர்களின் செல்போன் எண்ணுக்கு மோசடியாக லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அதே போல் ஓடிடி எண்ணை கேட்டு யாராவது போன் செய்தால் தர வேண்டாம் என்றும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு எந்தவிதமான ஓடிடி எண்ணும் தேவையில்லை என்றும் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

மோசடியான நபர்களிடம் இருந்து வரும் செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் மர்ம நபர்கள் அனுப்பும் அதிகாரபூர்வமற்ற லிங்குகளை டவுன்லோட் செய்ய வேண்டாமென்றும் இதுகுறித்து காவல்துறையினர் உடனடியாக புகார் தெரிவிக்குமாறு அறிவித்துள்ளனர்.

பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு விண்ணப்பம் செய்தவர்கள் கொஞ்சம் அசந்தால் அவர்களுடைய பேங்க் பேலன்ஸ் காலியாகி விடும் என்ற செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?