இந்தியா
மாமியார் வீட்டில் சண்டை: மாறி மாறி தற்கொலை செய்து கொண்ட கணவன் – மனைவி!
மாமியார் வீட்டிற்கு சென்ற இடத்தில் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டதால் மாறி மாறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அசோக் குமார் என்ற 42 வயது நபரும் அவருடைய மனைவி தேவி என்ற 40 வயது பெண்ணும் அசோக்குமாரின் மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
அங்கு அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கருத்து வேறுபாடு காரணமாக சண்டை வந்ததாகவும் இதனையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இதனை அடுத்து அசோக்குமார் திடீரென அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவியும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
மாமியார் வீட்டில் ஏற்பட்ட சண்டையால் கணவன் மனைவி ஆகிய இருவரும் மாறிமாறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.