Connect with us

இந்தியா

ஒடிசா அமைச்சரை சுட்டுக்கொன்ற உதவி காவல் ஆய்வாளர் இப்படிப்பட்டவரா? மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்!

Published

on

ஒடிசா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் நபாதாஸ் அவர்கள் உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கோபால் தாஸின் மனைவி கூறிய திடுக்கிடும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா அமைச்சர் நபாதாஸ் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவரது அவரை சுட்ட கோபால் தாஸ் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வருகிறார். சமீபத்தில் தான் தனது மனைவிம் மகன் மற்றும் மகளுடன் புது வீட்டிற்கு சென்ற கோபால்தாஸ் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

கடந்த 7 வருடங்களாக அவருக்கு உளவியல் பிரச்சனை இருந்ததாகவும் அவர் தொடர்ந்து அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கோபால் தாச் மனிஅவி தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தகவலை காவல் துறையினர் உறுதி செய்யவில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டு வரை கோபால்தாஸ் தனியார் மருத்துவமனையில் உளவியல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கொரோனா வைரஸ் பாதிப்பின் போது மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்ததால் அவர் ரெகுலராக சாப்பிட வேண்டிய மாத்திரைகளை சாப்பிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சில சமயம் மருந்துகள் அவருக்கு வாங்கி கொடுப்போம் என்றும் ஆனால் கடந்த நான்கு மாதங்களாக அவர் விடுமுறை கேட்டும் அதிகாரிகள் விடுமுறை அளிக்காததால் தான் அவரால் சிகிச்சை தொடர முடியாமல் இருந்ததாகவும் கோபால்தாஸ் மனைவி தெரிவித்துள்ளார்.

உளவியல் பிரச்சனைக்காக கோபால்தாஸ் சிகிச்சை பெற்று வந்ததை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் உளவியல் பிரச்சினை காரணமாக தான் அமைச்சர் நபாதாசை அவர் சுட்டுக் கொன்றது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்க மட்டுமே பரிந்துரை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் கோபால்தாஸ் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் முழுமையான விசாரணைக்கு பிறகு அவர் உளவியல் பிரச்சனைகளில் இருந்தாரா என்பதை உறுதி செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?