Connect with us

இந்தியா

அதானி குழுமத்திற்கு ரூ.7000 கோடி கடன் கொடுத்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி.. என்ன ஆகும்?

Published

on

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பெர்க் வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் குறைந்தது என்பதை பார்த்தோம். ஏற்கனவே அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய எல்ஐசி நிறுவனம் மிகப்பெரிய நஷ்டம் அடைந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது அந்த குழுமத்திற்கு கடன் வழங்கி உள்ள வங்கிகளும் மிகப்பெரிய சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அதானி குழுமத்திற்கு கோடி கணக்கில் கடன் கொடுத்துள்ள நிலையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7000 கோடி கடன் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை செயல் அதிகாரி கோயல் அவர்கள் கூறியபோது அதான குழுமத்திற்கு மட்டும் ரூ.7000 கோடி கடன் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ள அவர் ஆனால் அதே நேரத்தில் நாங்கள் கொடுத்த கடன் திரும்பி வராது என்ற கவலை தங்களுக்கு இல்லை என்றும் அமெரிக்காவின் ஆராய்ச்சி நிறுவனமான ஹண்டர்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு பிறகு அதானி குழுமத்தின் பங்குகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

#image_title

ரூ.7000 கோடியில் சுமார் 2500 கோடி ரூபாய் அதானியின் விமான நிலைய வணிகத்துடன் தொடர்புடையது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எப்போதும் அதானி குழுமத்தை தொடர்ந்து ஆதரித்து வருவோம் என்றும் அதானி குழுமம் பணத்தை திரும்ப செலுத்தாத முடியாத நிலையில் வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் கொடுத்த ரூ.7000 கோடி கடன் என்பது கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் இந்த குழுமத்தின் எட்டு நிறுவனங்களுக்கு பரவலாக இந்த கடன் கொடுக்கப்பட்டுள்ளதால் கடன் பணம் திரும்பி வருவதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்றும் இன்னும் ஓரிரு நாளில் அதானி குழுமத்தின் பங்குகள் சரிவு என்பது நின்றுவிடும் என்றும், அதன் பிறகு மீண்டும் ஏற்றம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் அதானி குழுமத்திற்கும் ஹிண்டர்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையே நிலவி வரும் மோதல் சூழ்நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கோயல் தெரிவித்தார். அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் வேண்டுமென்றே செய்த நடவடிக்கைகளில் ஒன்று தான் இந்த அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்ட நடவடிக்கை என்றும் கண்டிப்பாக அதானி குழுமம் இதிலிருந்து மீண்டு வருமென்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த ரூ.7000 கோடி கடனில் 6300 கோடி கடன் நிதி அடிப்படையில் ஆனது என்றும் மீதமுள்ளவை மட்டுமே நிதி அல்லாதவை என்றும் எந்த ஒரு அதானி குழுமத்தின் பங்கு உறுதிமொழியில் பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி உதவி செய்யவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

சினிமா8 hours ago

SSMB28-வது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மகேஷ் பாபு!

சினிமா9 hours ago

விஜே சித்ரா போன்றே ஹோட்டல் ரூமில் இளம் நடிகை தற்கொலை; ரசிகர்கள் ஷாக்!

வேலைவாய்ப்பு9 hours ago

IGNOU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 200

இந்தியா9 hours ago

தாய்மொழியில் மருத்துவக் கல்வி: பிரதமர் மோடி பேச்சு!

வேலைவாய்ப்பு10 hours ago

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு BSNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு10 hours ago

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

samantha
சினிமா10 hours ago

மையோசிடிஸ் பாதிப்பு: குணமடைந்தாரா சமந்தா?

சினிமா10 hours ago

’கரகாட்டக்காரன்2’ படத்தில் மிர்ச்சி சிவா?

சினிமா10 hours ago

’லியோ’ அப்டேட்; கெளதம் மேனனிடம் கறார் காட்டிய கெளதம் மேனன்!

ஆரோக்கியம்15 hours ago

சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

வேலைவாய்ப்பு6 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வணிகம்7 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

வேலைவாய்ப்பு4 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

உலகம்7 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

உலகம்7 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

வேலைவாய்ப்பு7 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்6 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

ugc
வேலைவாய்ப்பு6 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868

உலகம்7 days ago

ஆப்பிரிக்கா கண்டம் இரண்டாக பிரிகிறதா? புதிய கடல் உருவாகிறதா? ஆய்வாளர்களின் அதிர்ச்சி அறிக்கை..!