Connect with us

தமிழ்நாடு

எச்.ராஜா மீது வன்கொடுமை புகார்: நடவடிக்கை எடுக்குமா காவல்துறை!

Published

on

இயக்குநர் பா.ரஞ்சித்தின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு வன்கொடுமை செய்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழன் காலத்தில்தான் பட்டியலின மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும், அவருடைய ஆட்சி இருண்ட ஆட்சி எனவும் குற்றம்சாட்டியிருந்தார். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகங்களில் இது தொடர்பாக விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில் ரஞ்சித் மீது இரு பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து முன் ஜாமீன் கோரி ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ரஞ்சித்துக்கு ஆதரவாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர்.

அதில், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமையை நசுக்கும் வகையில் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தவறான வழக்கை ரத்து செய்ய வேண்டும். பாலிமர் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் இயக்குநர் ரஞ்சித்துக்கு எதிராக சாதிய வன்மத்துடனான பதிவுகளைத் தடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஞ்சித் மீது குற்ற எண்ணத்துடன் அவரின் மனைவி மற்றும் பெண் குழந்தை ஆகியோர் உள்ள குடும்பப் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதன் மூலம் தலித்மக்களை தூண்டி சட்டம், ஒழுங்கு மற்றும் சமூக அமைதியைச் சீர்குலைக்க முயலும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்கள், ரஞ்சித் குடும்பத்தினரின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வன்கொடுமை நடத்தியிருக்கிறார் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா. இதுபோன்று செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்8 மணி நேரங்கள் ago

10 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு இபிஎஸ் மூலம் மாதந்தோறும் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

செய்திகள்8 மணி நேரங்கள் ago

தென்னிந்தியாவில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை!

வணிகம்8 மணி நேரங்கள் ago

8ஆவது ஊதியக் குழுவால் எஸ்பிஐ ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வு! புதிய சம்பள விவரம் இதோ!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

புதன் பகவான் அனுஷ நட்சத்திர பெயர்ச்சி 2025 – இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மலரும்!

biggboss
சினிமா8 மணி நேரங்கள் ago

பிக்பாஸ் 9 இல் இந்த வாரம் ரம்யா மற்றும் FJ எலிமினேட் – டபுள் எவிக்ஷன் சென்சேஷன்!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

இந்தியன் வங்கியில் தீ பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் – இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

கோயம்புத்தூர் பட்டீசுவரசுவாமி கோயிலில் வேலைவாய்ப்பு: 8ஆம் வகுப்பு படித்தால் போதும் – மாத சம்பளம் ரூ.36,800 வரை!

வணிகம்9 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும்? முழு விவரம் இங்கே!

உலகம்9 மணி நேரங்கள் ago

உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் டாப் 5 நாடுகள் – இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

புதன்-செவ்வாய் இணைவு 2025: சில ராசிகளுக்கு தொடங்குகிறது அதிர்ஷ்ட காலம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது சம்பள ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும்? முழு விவரம் இதோ!

வணிகம்6 நாட்கள் ago

நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள் – வங்கி கணக்குகள், ஆதார், ஓய்வூதியம், எஸ்பிஐ சேவைகள் உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 4.6% உயர்வு – ரூ.1.95 லட்சம் கோடி வருவாய்!

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்கள் அட்டை 2025: சுகாதாரம் முதல் பயணம் வரை பல நன்மைகள் – நவம்பர் 1 முதல் அமலுக்கு!

வணிகம்6 நாட்கள் ago

நவம்பர் 3 முதல் யுபிஐ விதிகளில் பெரிய மாற்றம் – கூகுள் பே, போன்பே, பேடிஎம் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்குள் வேலையை விட்டு வெளியேறினால் EPS ஓய்வூதியம் கிடைக்குமா? – இபிஎஸ் ஓய்வூதியம் பற்றிய முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வேலையை விட்டு வெளியேறினால் EPS ஓய்வூதியம் கிடைக்குமா? – தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விதிகள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது சம்பள ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு? – ஃபிட்மென்ட் ஃபாக்டரில் பெரிய மாற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

போஸ்ட் ஆபீஸின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: அரசாங்க உத்தரவாதத்துடன் பாதுகாப்பான முதலீடு, மாதாந்திர வருமானம் உறுதி!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலைய (01/11/2025)!

Translate »