Connect with us

தமிழ்நாடு

பாதிரியார் பெனடிக் ஆன்றோவின் லீலைகள்: மேலும் 4 பெண்கள் புகார்!

Published

on

பெண்களிடம் ஆபாசமாக, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சர்ச்சை இளம் பாதிரியார் பெனடிக் ஆன்றோ நேற்று அதிரடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது தற்போது மேலும் 4 பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்துள்ளனர்.

#image_title

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த பெனடிக் ஆன்றோ பிலாங்காலை பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவர் தேவாலயத்துக்கு வரும் பல இளம் பெண்களிடம் வாட்சப் சாட் மற்றும் வீடியோ காலில் ஆபாசமாக பழகி வந்துள்ளார். நிர்வாண புகைப்படங்களை அனுப்புதல் என பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பான பல ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், வாட்சப் சாட்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது ஆஸ்டின் ஜினோ என்பவர் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

இதனையடுத்து ஆபாச பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த பாதிரியாரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் அவரை நேற்று நாகர்கோவில் பால்பண்னை பகுதியில் காரில் தப்பித்துசெல்ல முயன்றபோது மடக்கி பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.

இந்த பாதிரியார் ஆலய பணிக்காக மதுரை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். அங்கும் ஆலயங்களுக்கு வரும் இளம்பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மிரட்டியதாக தெரிகிறது. இதனையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவால் மிரட்டப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம், அவர்களுடைய பெயர் விவரம் ரகசியம் காக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் 4 பெண்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால், மேலும் பல அதிர்ச்சியளிக்கும் லீலைகள் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் பல பாதிக்கப்பட்ட பெண்கள் பாதிரியார் மீது புகார் அளிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Voters jubilate as military storm oba elegushi area of lagos state where thugs refused people from voting except it's for apc (video) infinity loaded. University of Engineering and Technology (UET) Lahore has exciting job opportunities across multiple campuses.. Those who are interested in applying for the rrb paramedical recruitment drive can do so online starting on august 17, 2024, and ending on september 16, 2024 at 11 : 59 pm.