Connect with us

சினிமா

ஸ்டார் ஹோட்டலில் மூட் இருந்தாத்தான் கதை கேட்பேன்… அஸ்வின் அப்பயே அப்படித்தான்!..

Published

on

சில சீரியல்களில் நடித்தவர் அஸ்வின். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சில பட வாய்ப்புகள் இவருக்கு வந்தது. அவர் நடித்த முதல் திரைப்படம் ‘என்ன சொல்ல போகிறாய்’.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய அஸ்வின் ‘எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. கதை பிடிக்கவில்லை எனில் தூங்கிவிடுவேன். 40 கதை கேட்டு தூங்கியிருக்கிறேன்’ என அவர் கூறியது திரையுலகில் எதிர்ப்பை பெற்றது. முதல் படம் ரிலிஸாகும் முன்பே அஸ்வினுக்கு இவ்வளவு திமிரா? என ரசிகர்களும், திரையுலகினரும் பேச துவங்கினர். மேலும், ஸ்லீப்பிங் ஸ்டார் என்கிற பட்டத்தை ரசிகர்கள் அவருக்கு கொடுத்தனர். மேலும், அவரை கிண்டலடித்து மீம்ஸ்களும் வலம் வந்தது.

இந்நிலையில், அஸ்வினை பற்றி மேலும் செய்தி தெரியவந்துள்ளது. சமீபத்தில் அவரை வைத்து படம் எடுக்க நினைத்த ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் அவரை தொடர்பு கொண்டது. அதற்கு ஒரு குறிப்பிட்ட நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் குறிப்பிட்ட எண் கொண்ட ஒரு அறையை சொல்லி ‘நான் அதில்தான் கதை கேட்பேன்’என அஸ்வின் கூற, தயாரிப்பு நிறுவனம் அதற்கும் ஏற்பாடு செய்தது. இயக்குனர் அங்கு சென்று காத்திருக்க மாலை வரை அஸ்வின் வரவே இல்லையாம். அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு ‘இன்னைக்கு மூட் இல்ல.. நாளைக்கு பாப்போம்’ என கூலாக கூறியுள்ளார். இதையடுத்து தற்போது அந்த வாய்ப்பு கவினுக்கு சென்றுவிட்டது.

மொத்தத்தில் அஸ்வின் இப்படியே பந்தா காட்டினால் வரும் வாய்ப்பை எல்லாம் இழப்பார் என திரையுலகில் பேச துவங்கியுள்ளனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?