Connect with us

உலகம்

பேருந்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் உடல்சிதறி பரிதாப பலி!

Published

on

பாகிஸ்தானில் சற்றுமுன் நடந்த பேருந்து குண்டுவெடிப்பில் சீனர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் உள்பட 13 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாகிஸ்தானில் சீனப் பொறியாளர்கள் சென்ற பேருந்தில் திடீரென குண்டு வெடித்து அதில் பயணம் செய்தவர்கள் சிதறி பலியாகினர். பாகிஸ்தானில் அணை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சீனப் பொறியாளர்கள் பயணம் செய்த பேருந்து மீது வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் பேருந்தில் இருந்த 9 சீனப் பொறியாளர்கள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

பாகிஸ்தானில் உள்ள வடக்கு பகுதியில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த 30 சீனப் பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினர் ஏற்றி சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதலில் 9 சீனப் பொறியாளர்கள் மற்றும் 2 துணை ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் பலியாகி உள்ளதாகவும் பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளன. மேலும் ஒரு சிலர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர் என்றும் காயமடைந்த அனைவருமே ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் சாலையில் வைக்கப்பட்ட வெடிகுண்டா? அல்லது பேருந்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டா? என்பது குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

வணிகம்6 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?