Connect with us

செய்திகள்

ஹிஜாப்பை கழட்ட சொன்ன சம்பவம்..பாஜக பிரமுகர் சிறையில் அடைப்பு….

Published

on

hijab

கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் பல களோபரங்கள் வெடித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாஜக முகவர் அதை கையில் எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அப்போது, மதுரை மேலூர் நகராட்சி 8வது வார்டில் ஒரு இஸ்லாமிய பெண் வாக்களித்த வந்தார். அப்போது அவர் ஹிஜாப் அணிந்திருந்தார். எனவே, அவரின் ஹிஜாப்பை அகற்றும்படி அங்கிருந்த பாஜக முகவர் கிரிராஜன் வற்புறுத்தினார். ஆனால், அப்பெண் ஹிஜாப்பை கழட்ட மறுத்தார்.

election

 

இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மற்ற முகவர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே, அங்கிருந்த போலீசார் முகவர் கிரிராஜனை வெளியேற்றி விட்டனர். அதன் பின்னரே வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

அந்த பாஜக முகவரின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்தது. அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை மார்ச் 4ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?