Connect with us

இந்தியா

திருமணமான மறுநாளே மனைவியை நடுரோட்டில் தவிக்கவிட்டு மாயமான கணவர்; பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

Published

on

பெங்களூரில் திருமணம் ஆன மறுநாளே மனைவியை நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு கணவர் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரில் கடந்த மாதம் 16ஆம் தேதி சிக்கபல்லாபூர் என்ற மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு திருமணம் நடந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் இந்த திருமணம் நடந்த நிலையில் திருமணம் ஆன மறுநாள் இருவரும் காரில் சென்றுள்ளனர்.
அப்போது பெங்களூரில் உள்ள ஒரு முக்கிய பகுதியில் டிராபிக்கில் கார் நின்று கொண்டிருந்தபோது திடீரென முன்பக்கத்தில் உட்கார்ந்து இருந்த கணவர் காரின் கதவை திறந்து ஓடிவிட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பின்பக்கத்தில் உட்கார்ந்து இருந்த மனைவி கணவரை விரட்டிக் கொண்டு சென்றும் பயனில்லை. அவர் ஒரு சில நிமிடங்களில் மாயமாகிவிட்டார்.

இதனை அடுத்து கிட்டத்தட்ட20 நாட்களுக்கு மேலாக தனது கணவரை காணவில்லை என்றும் அவரை தேடி வருவதாகவும் அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரித்த போது மனைவியை விட்டுச் சென்ற வாலிபருக்கு ஏற்கனவே கோவாவில் ஒரு குடும்பம் இருந்ததாக கூறப்படுகிறது.


கோவாவில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் தனக்கும் அந்த பெண்ணுக்கும் விவாகரத்துக்கும் ஆகிவிட்டது என்ற கூறிதான் இந்த பெண்ணை திருமணம் செய்ததாகவும் ஆனால் உண்மையில் விவாகரத்து ஆகவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து கோவாவில் உள்ள அவருடைய மனைவி, தான் தற்கொலை செய்து கொள்வதாக தனது கணவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அதனால் பயந்து அவர் தன்னை தவிக்க விட்டு விட்டு ஓடி விட்டதாகவும் மனைவி அந்த புகாரில் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறை கோவா போலீஸ் உதவியுடன் கணவரை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தனது கணவர் தன்னை தேடி கண்டிப்பாக வருவார் என்றும் அவர் பாதுகாப்பாக இருந்தாலே போதும் என்றும் செய்தியாளர்களிடம் அந்த பெண் கூறி உள்ளார்.

திருமணமான ஒரே நாளில் மனைவியை தவிக்க விட்டு விட்டு ஓடி சென்ற கணவனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சினிமா6 hours ago

SSMB28-வது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மகேஷ் பாபு!

சினிமா7 hours ago

விஜே சித்ரா போன்றே ஹோட்டல் ரூமில் இளம் நடிகை தற்கொலை; ரசிகர்கள் ஷாக்!

வேலைவாய்ப்பு7 hours ago

IGNOU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 200

இந்தியா8 hours ago

தாய்மொழியில் மருத்துவக் கல்வி: பிரதமர் மோடி பேச்சு!

வேலைவாய்ப்பு8 hours ago

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு BSNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு8 hours ago

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

samantha
சினிமா8 hours ago

மையோசிடிஸ் பாதிப்பு: குணமடைந்தாரா சமந்தா?

சினிமா8 hours ago

’கரகாட்டக்காரன்2’ படத்தில் மிர்ச்சி சிவா?

சினிமா9 hours ago

’லியோ’ அப்டேட்; கெளதம் மேனனிடம் கறார் காட்டிய கெளதம் மேனன்!

ஆரோக்கியம்13 hours ago

சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வணிகம்7 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

வேலைவாய்ப்பு4 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

உலகம்6 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

உலகம்7 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

வேலைவாய்ப்பு6 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்6 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

ugc
வேலைவாய்ப்பு6 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868

உலகம்7 days ago

ஆப்பிரிக்கா கண்டம் இரண்டாக பிரிகிறதா? புதிய கடல் உருவாகிறதா? ஆய்வாளர்களின் அதிர்ச்சி அறிக்கை..!