Connect with us

இந்தியா

திருமணமான மறுநாளே மனைவியை நடுரோட்டில் தவிக்கவிட்டு மாயமான கணவர்; பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

Published

on

பெங்களூரில் திருமணம் ஆன மறுநாளே மனைவியை நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு கணவர் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரில் கடந்த மாதம் 16ஆம் தேதி சிக்கபல்லாபூர் என்ற மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு திருமணம் நடந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் இந்த திருமணம் நடந்த நிலையில் திருமணம் ஆன மறுநாள் இருவரும் காரில் சென்றுள்ளனர்.
அப்போது பெங்களூரில் உள்ள ஒரு முக்கிய பகுதியில் டிராபிக்கில் கார் நின்று கொண்டிருந்தபோது திடீரென முன்பக்கத்தில் உட்கார்ந்து இருந்த கணவர் காரின் கதவை திறந்து ஓடிவிட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பின்பக்கத்தில் உட்கார்ந்து இருந்த மனைவி கணவரை விரட்டிக் கொண்டு சென்றும் பயனில்லை. அவர் ஒரு சில நிமிடங்களில் மாயமாகிவிட்டார்.

இதனை அடுத்து கிட்டத்தட்ட20 நாட்களுக்கு மேலாக தனது கணவரை காணவில்லை என்றும் அவரை தேடி வருவதாகவும் அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரித்த போது மனைவியை விட்டுச் சென்ற வாலிபருக்கு ஏற்கனவே கோவாவில் ஒரு குடும்பம் இருந்ததாக கூறப்படுகிறது.


கோவாவில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் தனக்கும் அந்த பெண்ணுக்கும் விவாகரத்துக்கும் ஆகிவிட்டது என்ற கூறிதான் இந்த பெண்ணை திருமணம் செய்ததாகவும் ஆனால் உண்மையில் விவாகரத்து ஆகவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து கோவாவில் உள்ள அவருடைய மனைவி, தான் தற்கொலை செய்து கொள்வதாக தனது கணவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அதனால் பயந்து அவர் தன்னை தவிக்க விட்டு விட்டு ஓடி விட்டதாகவும் மனைவி அந்த புகாரில் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறை கோவா போலீஸ் உதவியுடன் கணவரை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தனது கணவர் தன்னை தேடி கண்டிப்பாக வருவார் என்றும் அவர் பாதுகாப்பாக இருந்தாலே போதும் என்றும் செய்தியாளர்களிடம் அந்த பெண் கூறி உள்ளார்.

திருமணமான ஒரே நாளில் மனைவியை தவிக்க விட்டு விட்டு ஓடி சென்ற கணவனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?