சினிமா செய்திகள்
அட்லீ, ஷாருக்கான் இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல்!
தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று விஜய் படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி என்பதும் ’பிகில்’ திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிய பின்னரும் இன்னும் அவருக்கு அடுத்த படம் கமிட் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் படம் ஒன்றை அட்லி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இருப்பினும் ஷாருக்கான் அடுத்தடுத்து இரண்டு படங்கள் கைவசம் வைத்திருப்பதால் அட்லியுடன் இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்ற கேள்விக்குறி எழுந்தது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி அட்லீ மற்றும் ஷாருக்கான் இணையும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் ஷாருக்கான் இந்த படத்தில் இன்டர்போல் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் உலகின் பல நாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கதையை விஜய்க்காக அட்லி எழுதியதாகவும், அதில் தற்போது ஷாருக்கான் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.