Connect with us

சினிமா செய்திகள்

பொண்ணுங்க கோயிலுக்குள்ள வந்தா தீட்டாகிடுமா, எந்த கடவுள் சொல்லுச்சு? ஐஸ்வர்யா ராஜேஷ் கேள்வி!

Published

on

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் ஒரே நாளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டிரைவர் ஜமுனா மற்றும் மலையாள ரீமேக்கான தி கிரேட் இந்தியன் கிட்சன் உள்ளிட்ட படங்கள் வெளியாக இருந்தன.

கடைசி நேரத்தில் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வந்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதற்காக டிரைவர் ஜமுனா படம் மட்டுமே முதலில் வெளியானது. ஆனால், அந்த படம் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து படு தோல்வியை சந்தித்தது.

#image_title

இந்நிலையில், விரைவில் தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் வெளியாக உள்ள நிலையில், சபரி மலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படாதது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பொண்ணுங்களுக்குனா தீட்டா..”எந்த கடவுள் சொல்லுச்சு. கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. எந்தக்கடவுளும் என் கோவிலுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை.

அப்படி எந்த கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? இருந்தால் சொல்லுங்கள். எந்த கடவுளும் இது பண்ணக்கூடாது. இது சாப்பிடக்கூடாது என சட்டம் வைக்கவில்லை. எல்லேமே மனிதர்கள் உருவாக்கியது. நான் இது போன்ற கட்டுப்பாடுகளை எப்போதும் நம்புவதில்லை. இப்பொழுது கூட ஆணாதிக்கம் இருக்கிறது. ஆணாதிக்கம் என்பது கிராமத்து பக்கம் நிறைய இருக்கின்றது என்பது எனது கருத்து. சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாதது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#image_title

ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் கருத்தை எதிர்த்து சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் கருத்தை வரவேற்றுள்ளனர். நெட்டிசன்கள் படத்தின் ப்ரோமோஷனுக்காக இப்படி எதையாவது பேசி பரபரப்பை கிளப்புறாங்களாமாம் என கிண்டலடித்து வருகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?