இந்தியா
டாடாவிடம் ஏர் இந்தியா ஒப்படைப்பது எப்போது?
இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கிய நிலையில் டாடாவிடம் ஏர் இந்தியாவை ஒப்படைப்பது எப்போது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனம் கடன் சுமை தாங்க முடியாத நிலையில் இருந்ததால் அந்நிறுவனத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதனை அடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனம் முதலில் டாடாவிடம்தான் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அது தனது தாய் நிறுவனத்திற்கு சென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கியுள்ள நிலையில் ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் ஒப்படைப்பது எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை இந்த வார இறுதியில் டாடா குழுமத்திடம் முழுமையாக ஒப்படைக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடிக்கு வாங்கிய டாடா நிறுவனம் இந்த நிறுவனத்தை எப்படி லாபகரமாக கொண்டு செல்லப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிறுவனத்தை நடத்த வேண்டும் என்ற பல ஆண்டுகால டாடாவின் கனவு தற்போது நனவாகியுள்ள நிலையில் பல அதிரடி மாற்றங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தில் டாடா ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.