Connect with us

சினிமா செய்திகள்

‘தென் இந்திய படங்களை ஒப்பிட வேண்டாம்’- ரகுல் ப்ரீத்சிங் காட்டம்!

Published

on

படங்களை மொழிவாரியாக பிரித்து ஒப்பிட வேண்டாம் என நடிகை ரகுல் ப்ரீத்சிங் தெரிவித்துள்ளார்.

‘தடையற தாக்க’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது, அவர் கைவசம் ‘இந்தியன் 2’, ‘அயலான்’ ஆகிய படங்கள் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் படங்களை மொழிவாரியாக பிரித்து ஒப்பிட வேண்டாம் என காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.

ரகுல் ப்ரீத் சிங்

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, ” பல தென்னிந்திய மொழி படங்கள் இந்தி சேனல்களில் ஒளிபரப்பாகும் பொழுது அங்கிருக்கும் பார்வையாளர்களை பரவலாக சென்றடைகிறது.

அந்த படங்கள் அவர்களுடைய நல்ல வரவேற்பு பெற்று கொண்டாடவும் படுகிறது. ஒரு உண்மையை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்தி மற்றும் பிராந்திய மொழி படங்கள் அனைத்தும் இந்திய சினிமாவின் ஒரு பகுதியே.

இதை பிரித்துப் பார்த்து ஒப்பிட வேண்டாம். நல்ல படங்கள் என்பது நிச்சயம் எந்த மொழியில் வெளியானாலும் அதற்கான பார்வையாளர்களை அது சென்றடையும். சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் ஒவ்வொருவரும் இப்பொழுது தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது விவாதங்களுக்கு வழிவகுக்கும்.

நம்மிடம் திறமையான பல கலைஞர்கள், நல்ல படைப்பாளிகள், நடிகர்கள் உள்ளனர். அவர்களை வைத்து சர்வதேச திரைப்படங்களை உருவாக்க முடியும். அதனால், படங்களை மொழிவாரியாக பிரித்து ஒப்பிட வேண்டாம் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன்” என அந்த பேட்டியில் கூறியுள்ள ரகுல் பிரீத் சிங்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?