சினிமா செய்திகள்
பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிரபல நடிகை பரிதாப மரணம்!
தனது உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிரபல நடிகை பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி நடிகை சேத்தனா ராஜ் தனது உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அவரது நுரையீரலில் நீர் தேங்க தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவர் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அந்த மருத்துவமனையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து மறைந்த நடிகை சேத்தனா ராஜ் தனது பெற்றோரிடம் தெரிவிக்க வில்லை என்றும் நண்பர்களுடன் மற்றும் சென்று மருத்துவமனைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை சேத்தனா ராஜ் பெற்றோர்கள் தங்கள் மகளின் மரணத்திற்கு மருத்துவரின் அலட்சியமே காரணம் என்று காவல் துறையில் புகார் அளித்துள்ள நிலையில் இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நடிகை சேத்தனா ராஜ் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.