Connect with us

சினிமா செய்திகள்

மது போதையில் தகராறு..? சண்டையிடும் நடிகர் விஷ்ணு விஷாலின் சிசிடிவி வீடியோ – உண்மை என்ன??

Published

on

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், தான் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் பரபரப்பு சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் தமிழ்நாடு சார்பில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவர் விஷ்ணு விஷால். சினிமாவுக்கு வந்து சாதித்ததால் கிரிக்கெட் வாழ்க்கையை கைவிட்டார். தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களில் நடித்த விஷ்ணு விஷாலுக்கு கடைசியாக ‘ராட்சசன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியாக அமைந்தது. அதிலிருந்து பல்வேறு படங்களில் அவர் பிஸியாக நடித்து வருகிறார்.

அதே நேரத்தில் விஷ்ணு விஷாலின் தனிப்பட்ட வாழ்க்கை மோசமாகவே இருந்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். அதையடுத்து பிரபல பாட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவிடம் காதலில் விழுந்தார் விஷ்ணு. இருவருக்கும் 2020 ஆம் ஆண்டு எங்கேஜ்மென்ட் முடிந்துள்ளது.

சொந்த வாழ்க்கைப் பிரச்சனை காரணமாக நடுவில் சில ஆண்டுகள் குடி போதைக்கு அடிமையாகியுள்ளார் விஷ்ணு. ஆனால், அதிலிருந்து மீண்டு வந்து தன் உடலை ரெடி செய்து, சினிமாவிலும் ஜெயித்துக் காட்டினார்.

இந்நிலையில் தற்போது அவர் குறித்தான இன்னொருப் பிரச்சனை பூதாகரமாகியுள்ளது. சென்னை, கோட்டூர்புரத்தில் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் விஷ்ணு. அங்கு அவர் அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதாக அடுக்கு மாடி குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் காவல் துறைக்குப் புகார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அடுக்கு மாடி குடியிருப்புக்குச் சென்ற போலீஸ், விஷ்ணுவிடம் விசாரணை நடத்தியுள்ளது. அப்போது விஷ்ணு போலீஸிடமும், குடியிருப்பைச் சேர்ந்தவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் விஷ்ணு, தன் ட்விட்டர் பக்கத்தில், ‘நீங்கள் தினமும் மது அருந்திக் கொண்டிருந்தால், 6 பேக் என்பது உடனடியாக வந்து விடாது. மிகத் தீவிரமான டயட் மற்றும் மது குடிக்காமல் வெகு நாட்கள் இருக்க வேண்டும். இந்த லாஜிக் சிலருக்குப் புரியாது’ என்று நடந்த சம்பவத்துக்கு சூசகமாக விளக்கம் கொடுத்துள்ளார். இந்தப் பிரச்சனை குறித்து போலீஸ் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.

தமிழ்நாடு3 mins ago

ஆன்லைன் சூதாட்ட கம்பெனிகளுக்கு ஆதரவாக ஆளுநர்… சந்தேகத்தை கிளப்பும் அன்புமணி!

வணிகம்5 mins ago

ஒரே நாளில் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை (27/03/2023)!

இந்தியா59 mins ago

பிரதமர் ஒரு கோழை, திமிர் பிடித்தவர்… பிரியங்கா காந்தி ஆவேசம்!

இந்தியா1 hour ago

உலகின் பணக்கார பிஸ்கட் உற்பத்தியாளரான பிரிட்டானியா நஸ்லி வாடியா: நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலகம்2 hours ago

இன்றைய வேலைநீக்க செய்தி: 10% ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் NPR

இந்தியா2 hours ago

ரெப்பொ வட்டி விகிதம் 25 புள்ளிகள் உயர்த்தப்படுகிறதா? என்ன செய்ய போகிறது ரிசர்வ் வங்கி..!

சினிமா15 hours ago

SSMB28-வது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மகேஷ் பாபு!

சினிமா15 hours ago

விஜே சித்ரா போன்றே ஹோட்டல் ரூமில் இளம் நடிகை தற்கொலை; ரசிகர்கள் ஷாக்!

வேலைவாய்ப்பு16 hours ago

IGNOU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 200

இந்தியா16 hours ago

தாய்மொழியில் மருத்துவக் கல்வி: பிரதமர் மோடி பேச்சு!

வேலைவாய்ப்பு6 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வேலைவாய்ப்பு4 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

உலகம்7 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

வேலைவாய்ப்பு7 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்6 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

வேலைவாய்ப்பு6 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868

ugc
வேலைவாய்ப்பு6 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

டிகிரி முடித்தவர்களுக்கு IBTRD-யில் வேலைவாய்ப்பு!

உலகம்7 days ago

மனிதர்களுக்கு புற்றுநோய் இருப்பதை எறும்புகள் கண்டுபிடித்துவிடுமா? மருத்துவர்களின் கண்டுபிடிப்பு

வேலைவாய்ப்பு6 days ago

டிகிரி முடித்தவர்களுக்கு நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!