Connect with us

இந்தியா

ஆதார் – பான் கார்டு இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு!

Published

on

ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், இதுவரையிலும் பான் – ஆதாரை இணைக்காத பொதுமக்கள், இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொடக்கத்தில் பான் – ஆதார் அட்டை இணைக்க எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. ஆனால், பிறகு 500 ரூபாய் அபராதம் விதித்து கால அவகாசத்தை நீட்டித்தது. அதன் பிறகு, 1,000 ரூபாய் அபராதம் விதித்து கால அவகாசத்தை நீட்டித்தது. இப்போதும் பான் ஆதார் அட்டையை 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி தான் இணைக்க வேண்டும்.

கால அவகாசம் நீட்டிப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டில் பான் கார்டை, ஆதார் கார்டுடன் அனைவரும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி அதற்கு கடைசி நாளாக இருந்தது. ஆனால், நாட்டில் அப்போது நிலவிய கொரோனா சூழல் காரணமாக இந்த அவகாசம் நடப்பு ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

கால அவகாசத்திற்கு இன்னனும் 3 நாட்களே உள்ள நிலையில், கூடுதல் அவகாசம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான கால அவகாசம், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது வருகின்ற ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?