வணிகம்
பான்கார்டு பயன்படுத்தும்போது இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீர்கள்.. இல்லையேல் ரூ.10,000 அபராதம்!
கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியனுக்கும் தற்போது பான் கார்டு என்பது அவசியமாகிவிட்ட ஒன்றாக கருதப்படுகிறது. வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றாலோ, வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் செய்ய வேண்டும் என்றாலோ, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலோ, பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலோ கண்டிப்பாக பான் கார்டு அவசியம் என்பதால் ஒவ்வொருவரும் ஒரு பான் கார்டு எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பது என கருதப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் பான் கார்டு வைத்திருந்தால் மட்டும் போதாது, அதனை சரியான வகையில் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வருமானவரித்துறையால் பான் கார்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு தனித்துவமான 10 இலக்க எண் கொண்ட பான் கார்டு வழங்கப்படும் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இது ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படும் நிலையில் பான் கார்டு என்ற ஆவணத்தை பயன்படுத்தும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் பான் கார்டு பயன்படுத்துதல் சில சிறிய தவறுகள் செய்தால் கூட ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
எனவே சட்ட சிக்கல்கள் மற்றும் அபராதத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அனைவரும் பான் கார்டு பயன்படுத்த போது, குறிப்பாக 10 இலக்க எண்ணை நிரப்பும்போது கவனத்துடன் நிரப்ப வேண்டும். பான் கார்டு விவரங்களை நிரப்பும்போது எழுத்துப்பிழை ஏற்பட்டால் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
அதே போல் ஒருவர் ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பதும் இரண்டாவது பான் கார்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஏதேனும் ஒரு காரணத்திற்காக இரண்டாவது பான் கார்டு வைத்திருந்தால் உடனடியாக அந்த பான் கார்டை வருமானவரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். வருமான வரித்துறையினர் இரண்டாவது பான் கார்டை ரத்து செய்து அபராதத்தில் இருந்து உங்களை தப்பிக்க வைப்பார்கள்.
இரண்டு பான் கார்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலோ, பான் கார்டில் ஏதேனும் குறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலோ, முதல் வேலையாக உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும். எனவே நீங்கள் வங்கிகளில் இருந்து எந்த விதமான பரிவர்த்தனையும் செய்ய இல்லாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
1960 இல் பிரிவு 272b-யின் படி பான் கார்டு தகவலை தவறாக வழங்கும் நபருக்கு அதிகபட்சமாக ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று சட்டம் உள்ளதை அடுத்து வருமான வரி தாக்கல் படிவம் செய்யும் போது உள்பட பான் கார்டு விவரங்களை உள்ளிடும் போது மிகவும் கவனத்துடன் சரியான எண்களை பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பான் கார்டில் ஏதேனும் தவறு இருந்து அதை நீங்கள் திருத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.
ஆன்லைனில் பான் மாற்றக் கோரிக்கைப் படிவத்தை நிரப்ப வேண்டும், உங்கள் பான் எண்ணை சரியாக குறிப்பிடவும்.
நீங்கள் என்ன மாற்றம் செய்ய விரும்புகிறீர்களோ, அதற்கான பகுதியை தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் பெயர் எவ்வாறு உச்சரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் மாற்றினால், சரியான எழுத்துப்பிழையை உள்ளிட்டு, இடது விளிம்பில் உள்ள பகுதியை தேர்ந்தெடுக்கவும்.
உங்களின் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து படிவத்தை சமர்ப்பிக்கவும்.
உங்கள் மாற்றங்கள் உறுதிசெய்யப்பட்டதும், 15 இலக்க ஒப்புகை எண் காட்டப்படும். இந்த எண்ணை சேமித்து, மேலும் தகவல்தொடர்புக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை செலுத்தி அதனை பிரிண்ட் அவுட் எடுத்து, தேவையான ஆவணங்களை இணைத்து வருமான வரி பான் சேவைகள் பிரிவுக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் UTIITSL இணையதளத்தில் ஆவணத்தை சமர்ப்பிக்கிறீர்கள் என்றால், மும்பை, கொல்கத்தா, புது டெல்லி அல்லது சென்னையில் உள்ள UTIITSL அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றிற்கு தேவையான ஆவணங்களை நீங்கள் அனுப்ப வேண்டும்.