இந்தியா
முன்னாள் முப்படைத் தளபதி பிபின் ராவத்திற்கு உத்தரகாண்டில் சிலை!

இந்தியாவின் முன்னாள் முதல் முப்படைத் தலைமைத் தளபதியான பிபின் ராவத்திற்கு உத்தரகாண்டில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இவரது சிலையை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேற்று திறந்து வைத்தார்.
முதல் முப்படைத் தலைமைத் தளபதி
இந்தியாவின் முதல் முப்படைத் தலைமைத் தளபதியான பிபின் ராவத், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், நீலகிரி அருகே நடந்த ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அப்போது நாடு முழுவதும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தது. இவருடைய சாதனைகளை போற்றும் வகையில், இவருடைய சொந்த மாநிலமான உத்தரகாண்டில் பிபின் ராவத்திற்கு சிலை நிறுவ மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அதன்படி அம்மாநிலத் தலைநகர் டேராடூனில், பிபின் ராவத்திற்கு சிலை அமைக்கப்பட்டது. இவருடைய சிலையை உத்தரகாண்ட் மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். அத்துடன் அரசின் திட்டம் ஒன்றிற்கும் பிபின் ராவத்தின் பெயரை சூட்டி அவருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பிபின் ராவத்திற்கு புகழாரம்
நிகழ்ச்சியில் பேசிய முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி, முன்னாள் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், உத்தரகாண்டின் பெருமை எனவும், உத்வேகம் தரும் அடையாளம் எனவும் புகழாரம் சூட்டினார். பிபின் ராவத்தின் மிகச் சிறந்த வியூகம் மற்றும் இராணுவ தலைமைத் திறமைக்கு சர்ஜிக்கல் தாக்குதல் மிகவும் சிறந்த உதாரணம் எனவும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பிபின் ராவத்தின் மகள்களான கிரித்திகா மற்றும் தாரிணி ஆகிய இருவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.