Connect with us

இந்தியா

நகைக்கடையை கொள்ளையடிக்க 15 அடி சுரங்கப்பாதை தோண்டிய திருடர்கள்.. அதன்பின் நடந்த டுவிஸ்ட்..!

Published

on

நகை கடைக்கு கொள்ளை அடிக்க 15 அடி சுரங்கப்பாதை தோண்டிய திருடர்கள் தங்களது முயற்சி பலனளிக்கவில்லை என்பதை அறிந்து நகைக்கடைக்காரர் இடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்ற சம்பவம் மீரட் நகரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மீரட் நகரில் உள்ள பிரதான பகுதியில் தீபக் என்பவர் நகைக்கடை வைத்து இருக்கிறார். இந்த கடைக்கு திருட இரண்டு கொள்ளையர்கள் முடிவு செய்து பல நாட்கள் ஆக நோட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு கிட்டத்தட்ட 15 நாட்களாக நகை கடைக்கு செல்லும் வகையில் 15 அடி நீளத்தில் சுரங்கம் தோண்டியதாக தெரிகிறது.

இதனை அடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்த தினத்தில் அந்த திருடர்கள் கேஸ் கட்டர்கள் உள்பட ஆயுதங்களை கொண்டு வந்து நகைக்கடையின் கதவை உடைத்து நகை கடைக்குள் நுழைந்தனர். ஆனால் நகைக்கடையில் உள்ள பெட்டகத்தையே அவர்களால் திறக்க முடியவில்லை. கேஸ் கட்டர்கள் இருந்தும் கேஸ் கட்டர் மூலம் அந்த பெட்டகத்தை திறக்க முடியாததால் அவர்கள் தங்கள் கொள்ளை முயற்சியில் தோல்வி அடைந்தனர்.

மேலும் அந்த பெட்டகம் அருகே கிருஷ்ணர் சிலை இருந்தது. அந்த சிலையை அவர்கள் திருப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. நாம் திருடுவதை கடவுள் பார்க்க கூடாது என்பதற்காக அவர்கள் சிலையை திருப்பி வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ஒரு கட்டத்தில் இனிமேல் பெட்டகத்தை திறக்க முடியாது என்று முடிவு செய்ததை அடுத்து அந்த கொள்ளையர்கள் சுவற்றின் மேல் ’சாரி’ என்று எழுதி அதன் பிறகு மாயமாகிவிட்டதாக தெரிகிறது.

மறுநாள் தீபக் தனது நகைக்கடையை திறக்க வந்த போது சுவரில் ஓட்டை போடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பெட்டகத்தில் எந்த நகையும் திருடப்படவில்லை என்பதை அறிந்து அவர் நிம்மதி அடைந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணையை தொடங்கினார்.

சிசிடிவி கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கையும் திருடர்கள் திருடி சென்று விட்டதால் அந்த பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி கேமராக்கள் மூலம் திருடர்களை அடையாளம் காண முயற்சி செய்தனர். நீண்ட முயற்சிக்கு பிறகு திருடர்கள் சுன்னு மற்றும் முன்னு ஆகிய இருவர் என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இருவரையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

நகைக்கடையை கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்கள் அந்த முயற்சி பலனளிக்காததால் நகைக்கடை ஓனருக்கு சாரி சொல்லி விட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா55 minutes ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா2 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா2 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்6 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்16 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

Translate »
Com/kb/278835 für den firefox webbrowser besuchen sie bitte diese seite von mozilla : https : //support. 6 5+1 hutten 10+2 personen charter catamaran turkije met kapitein. Amazing 5 days nile cruise from luxor to aswan with sightseeing and abu simbel.