Connect with us

இந்தியா

பாதுகாப்பு பெட்டகம் வரை சுரங்கம்.. எஸ்பிஐ வங்கியையே காலி செய்த கொள்ளையர்கள்!

Published

on

பாதுகாப்பு பெட்டகம் வரை சுரங்கம் தோண்டி எஸ்பிஐ வங்கியில் உள்ள தங்கம், ரொக்கம் என மொத்தத்தையும் காலி செய்த கொள்ளையர்களால் கான்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கான்பூர் அருகே உள்ள எஸ்பிஐ வங்கியில் திருடர்கள் பத்தடி நீளத்துக்கு சுரங்கப்பாதை தோண்டி உள்ளே சென்று சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கான்பூரில் உள்ள பானுதி என்ற பகுதியின் ஸ்டேட் வங்கி கிளை கடந்த சில ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இந்த வங்கியை கடந்த பல நாட்களாக நோட்டமிட்ட கொள்ளையர்கள் வங்கியின் பாதுகாப்பு பெட்டகம் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

அதன் பின்னர் அந்த பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து சில அடி தூரத்தில் இருந்த காலி மனையில் இருந்து சுரங்கம் தோண்ட ஆரம்பித்தனர். இரவோடு இரவாக 10 அடி சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் நுழைந்து அங்கு உள்ள லாக்கரை உடைத்து 1.8 கிலோ தங்கம் மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் ரொக்கத்தின் மதிப்பு 1 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மறுநாள் காலை வங்கி அதிகாரிகள் வங்கியை திறந்தபோது பாதுகாப்பு பெட்டகத்தில் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை கண்டுபிடித்தனர். அதுமட்டுமின்றி அங்கிருந்து தோண்டப்பட்ட சுரங்கத்தையும் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து காவல்துறையில் புகார் அளித்த நிலையில் காவல் துறையினர் விரைந்து வந்து மோப்ப நாய் மற்றும் தடயவியல் ஆய்வாளர்கள் உதவியுடன் விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொள்ளை பல நாட்கள் திட்டமிடப்பட்டு கைதேர்ந்த கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு சில கைரேகைகள் சிக்கியுள்ள நிலையில் அந்த கைரேகைகளை வைத்து கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுரங்கம் தோண்டி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தங்கம் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?