இந்தியா
மேட்ரிமோனியல் மூலம் நடந்த திருமணம்.. சில நாட்களில் நடந்த திடுக்கிடும் திருப்பம்..!

குஜராத்தை சேர்ந்த ஒருவர் மேட்ரிமோனியல் மூலம் ஒரு பெண்ணை கண்டுபிடித்து திருமணம் செய்த நிலையில் அந்த பெண் சில நாட்களில் ஒரு கொள்ளை கும்பலை சேர்ந்தவர் என்பதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விமல் கரியா என்பவர் மேட்ரிமோனியல் மூலம் தனக்கான துணையை தேடினார். அப்போது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரீட்டா தாஸ் என்பவரை மேட்ரிமோனியில் மூலம் சந்தித்து அவருடன் பேசினார். இருவரது மனங்களும் ஒன்று சேர்ந்ததை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
ரீட்டா தாஸ் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகத்து பெற்றவர் என்று கூறியிருந்தார். அவரது விவாகரத்து சான்றிதழ் விமல் கேட்டபோது தன்னுடைய திருமணம் பதிவு செய்யப்படவில்லை என்றும் பெரியவர்களால் பஞ்சாயத்து செய்யப்பட்டு விவாகரத்து செய்யப்பட்டதாகவும் எனவே அதற்கான ஆவணங்கள் இல்லை என்றும் கூறினார்.

#image_title
ரீட்டா தாஸை விமல் நம்பியதை அடுத்து இருவருக்கும் திருமணம் நடந்தது. அகமதாபாத்தில் இன்று திருமணம் நடந்த நிலையில் ஆறு மாதங்கள் இருவருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென தனது சொந்த ஊரில் ஒரு நில விவகாரத்தை கையாள வேண்டும் என்று ஊருக்கு செல்வதாக ரிட்டா கூறினார். ஆனால் திரும்பவே இல்லை.
இதனை அடுத்து விமல் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது விசாரணையில் சில திடுக்கிடும் தகவல் கிடைத்தது. விமல் மனைவியின் உண்மையான பெயர் ரீட்டா தாஸ் இல்லை என்றும், ரேகா தாஸ் என்றும் தெரியவந்தது. அது மட்டும் இன்றி அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி என்றும் தெரியவந்தது. இதனை அடுத்து விமல் அதிர்ச்சி அடைந்தார்.
ரேகா தாஸ் ஏற்கனவே அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும் இருவரும் அசாம் மாநில சட்டசபை முன் நிறுத்தப்பட்டிருந்த கார் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டனர் என்றும் அனில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் ரேகா தாஸ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார் என்றும் தெரியவந்தது. இதை அறிந்த விமல் பெரும் அதிர்ச்சி அடைந்து தனது மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



















