தமிழ்நாடு
சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு: மீண்டும் கைது செய்த சிபிசிஐடி போலீஸார்!

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுஷில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஒரு ஆண்டு ஜாமீன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் பல்வேறு தகவல்களையும் ஆதாரங்களையும் திரட்டி தாகவும் மாணவிகளுடன் ஆபாசமாக பேசிய வீடியோக்களும் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையில் இருந்து லேப்டாப் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டது இல் இருந்து ஏராளமான ஆதாரங்கள் சிக்கியதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இதனை அடுத்து சங்கர் பாபாவுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது திடீரென மீண்டும் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை மீண்டும் கைது செய்துள்ளனர். புழல் சிறையில் தற்போது இருக்கும் சிவசங்கர் பாபா மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சிவசங்கர் பாபா மீது ஒரே மாதத்தில் இரண்டு முறை அடுத்தடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















