இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.03.2026

- சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் 9 பேரும் குற்றவாளிகள். தண்டனை விவரம் 30ம் தேதி அறிவிக்கப்படும் என மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவிப்பு.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை காலை சவரனுக்கு ரூ.5360 குறைந்த நிலையில் பிற்பகல் மேலும் ரூ.2240 குறைந்து, தற்போது மாலையில் ரூ.5360 உயர்ந்தள்ளது. கிராம் ரூ.13340க்கும் சவரன் ரூ.106720க்கும் விற்பனை ஆனது.
- விதிகளை மீறி வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று உரிமம் ரத்தாகிய NGOக்களின் சொத்துக்களை அரசே நிர்வகிக்க FCRA (Foreign Contribution Regulation Act) சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
- ஐசிசி வழங்கும் பிப்ரவரி மாத்திற்கான Player of the Month விருதை பெறுகிறார் இந்திய வீராங்கனை அருந்த்தி ரெட்டி.
- கடந்த 2 நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து ஈரான் மீதான போர் அடுத்த 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு.
- தஞ்சாவுரில் மார்ச் 4ம் தேதி தவெக தலைவர் விஜயை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி அறிவிப்பு.

















