இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 23.03.2026

- மார்ச் 23 முதல் மிகப்பெரிய மாற்றம் – நாடு தழுவிய எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய அரசு வர்த்தக எல்பிஜி விநியோகத்தை 20% அதிகரித்து, மொத்த ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தியுள்ளது. இந்த கூடுதல் எரிவாயு முதலில் தாப்பாக்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், சாலையோர கடைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
- ரயில் மீது கல் வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை. இக்குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
- மத்திய கிழக்கில் போர் 23-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக, உலக எரிசக்தி வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடுவதற்கு ஈரான் முயற்சி மேற்கொண்டுள்ளது. இது உலக நாடுகளிடையே கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
- சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு.
- தமிழ்நாட்டில் துரந்தர் 2 படத்தைத் தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் அரசியல் சார்பான கருத்தகள் படத்தில் உள்ளதாக மனு தாக்கல்.
- உரிமையாளர் இல்லாத வாகன ஓட்டிக்கும் விபத்து காப்பீடு கிடைக்கும்!W.P.(MD) No.6447 of 2023 · வண்டி ஓட்டியவர் உரிமையாளர் இல்லையென்றாலும் ரூ.15 லட்சம் இழப்பீடு உண்டு. மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5360 குறைவு. கிராம் ரூ.12950க்கும் சவரன் ரூ.103600க்கும் விற்பனை ஆகிறது.
- வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து கிராம் ரூ.235க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.235000க்கும் விற்பனை ஆகிறது.
- நாடு முழுவதும் வங்கிகள், ஏடிஎம்களில் பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டண விதிகள் ஏப்.1 முதல் அமல். இனி 5 முறைக்கு மேல் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்-களில் பணம் எடுத்தால் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும்

















