வணிகம்
அட்டகாசமான அரசு திட்டம்: மாதம் ரூ.42 சேமித்து, ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்!

அடல் ஓய்வூதிய திட்டம்: வெறும் ரூ.42 முதலீடு செய்து, மாதம் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்!
முதுமையில் நிதி ஆதாரமின்றி தவிக்க வேண்டாம்! நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான அரசு திட்டங்களில் அடல் ஓய்வூதிய திட்டம் (Atal Pension Yojana – APY) முக்கியமானதாகும். வெறும் ரூ.42 மாதாந்திர சேமிப்பு மூலம், நீங்கள் 60 வயது முடிந்ததும் மாதம் ரூ.5000 வரை ஓய்வூதியம் பெறலாம்!
அடல் ஓய்வூதியத் திட்டம் – சிறப்பு அம்சங்கள்:
- மத்திய அரசால் 2015ல் தொடங்கப்பட்டது
- 18 முதல் 40 வயது உடையவர்கள் இதில் சேரலாம்
- 60 வயது முடிந்தவுடன் ஓய்வூதியம் பெறலாம்
- மாதம் ரூ.42 முதல் ரூ.210 வரை முதலீடு செய்யலாம்
- ஓய்வூதியம் ரூ.1000 முதல் ரூ.5000 வரை பெறலாம்
- 40 வயதில் சேரும் நபர்கள், மாதம் ரூ.291 முதல் ரூ.1,454 வரை முதலீடு செய்ய வேண்டும்
- எந்தவொரு வங்கிக் கணக்கிலிருந்தும் கட்டணம் தானாக பிடிக்கப்படும்
அடல் ஓய்வூதிய திட்டத்தில் இணையும் முறை:
- அருகிலுள்ள வங்கிக் கிளைக்கு சென்று கணக்கு திறக்க வேண்டும்
- APY விண்ணப்பப் படிவத்தை நிரப்பி வழங்க வேண்டும்
- ஆதார் அட்டை நகல் மற்றும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்
- வங்கி அதிகாரிகள் உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து, பதிவை உறுதிப்படுத்துவார்கள்
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு உறுதிப்படுத்தல் தகவல் SMS வரும்















