Connect with us

உலகம்

பயங்கரமான நிலநடுக்கம்: 300க்கும் மேற்பட்டோர் பலி என தகவல்!

Published

on

கரீபியன் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று அதிகாலை திடீரென கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதி என்ற பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியது என்பதும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரை மட்டமாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இடிபாடுகளுக்கு இடையே சுமார் 300க்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளதாகவும் மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் மீட்பு பணிக்கு பின்னர் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் 7.2 என்ற மிக அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் கட்டிடங்களில் இருந்து வெளியே ஓடி வந்து பதட்டத்துடன் இருக்கும் காட்சிகளிலும் கூடிய வீடியோக்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஹைதி தீவில் ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?