இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.12.2025

- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் துறை சார்ந்த கேள்விகளை தனித்தனியாக கேட்க வேண்டும். – தகவல் ஆணையம்.
- அரசு ஊழியர்களின் சொத்து விவரங்கள் கடன் குறித்த விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல. அவற்றை வெளியிடலாம். பொதுமக்கள் பார்வையில் இருப்பதை ஏற்க வேண்டும். தகவல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
- பான்கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க டிசம்பர் 31 தான் கடைசி நாள். தவறினால் வருமானவரி செலுத்துதல் மற்றும் பண பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது. – ஒன்றிய அரசு எச்சரிக்கை.
- தமிழ்நாடு மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதை தடுக்க உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
- ஒன்றிய அரசின் கலால் சட்டத்திருத்தத்ததால் சிகரெட் விலை 3 மடங்காக உயருகிறது. ஒரு சிகரெட் விலை ரூ.72. புகையிலைக்கான வரி 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர வாய்ப்பு
- சிவகார்த்திகேயன் நடித்துள்ள “பரசக்தி திரைப்படத்தின் World of Parasakthi வீடியோ வெளியானது.

















