இந்தியா
பெட்ரோல் விற்பனை நிலையங்களின் நில குத்தகைகள் குத்தகை காலம் முடிந்த பின்னும் தொடர்ந்தால் உரிமம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.பி.ஆர்.மேனன் என்பவர் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றம் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை வசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள நிலத்தின் குத்தகை புதுப்பிக்கப்பட்டள்ளதா என்பதை சரிபார்ப்பதில்லை. இதனால் குத்தகை காலம் காலாவதியான பின்னரும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அதே நிலத்தில் செயல்படுகின்றன.
நிலத்தின் குத்தகை காலம் முடிந்தவிட்டால் சட்டப்படி பெட்ரோல் விற்பனை நிலையத்தின் உரிமமும் ரத்தாகிவிடும். எனவே குத்தகை புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய பெட்ரோலியத் துறைக்கு அனுப்பிய கடிதத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தமிழ்நாட்டில் எத்தனை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன? எத்தனை நிலையங்களின் குத்தகை காலம் காலாவதியாகி உள்ளது? குத்தகை புதுப்பிக்கப்ட்டவை எத்தனை இதை உறுதி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 11 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.












