Connect with us

தமிழ்நாடு

தூத்துக்குடியில் போட்டியா? ஸ்டாலினை கேட்க வேண்டிய கேள்வி இது: கனிமொழி அதிரடி!

Published

on

திமுக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கனிமொழி வரும் மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள வேளையில், இதுகுறித்த கேள்விக்கு தூத்துக்குடியில் இருந்தே பதில் அளித்துள்ளார் கனிமொழி.

மாநிலங்களவையில் சிறப்பாக செயல்படும் கனிமொழி குலசேகரப்பட்டிணம் ஏவுதளம், ஸ்டெர்லைட் போன்ற விவகாரங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் திமுக நடத்தும் ஊராட்சி சபைக் கூட்டங்களில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு வருகிறார். இதனையடுத்து கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நேற்று முதல் தூத்துக்குடியில் ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்துகொண்டு வரும் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள். எனக்கு தூத்துக்குடி பகுதியை தலைவர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். அதன்படி இங்கு வந்துள்ளேன் என்றார்.

இதனையடுத்து நீங்கள் தூத்துக்குடியில் போட்டியிடுவதற்கு இதனை ஒரு அச்சாரமாக எடுத்துக் கொள்ளலாமா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கனிமொழி, இது தலைவர் ஸ்டாலினைக் கேட்க வேண்டிய கேள்வி. என்னுடைய கட்சியின் தலைவர் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன் என்றார்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?