Connect with us

உலகம்

கண்ணீர் விட்ட கூகுளில் வேலையிழந்த இளம்பெண்.. அதன்பின் செய்தது தான் ஹைலைட்!

Published

on

கூகுள் நிறுவனத்தில் இருந்து வேலையில் இருந்து நீக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் முதலில் கண்ணீரை கண்ணீர் வடித்த நிலையில் அதன் பின் அவர் என்னென்ன செய்தார் என்பதை youtube இல் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் கூகுள் நிறுவனம் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்தது. சிக்கன நடவடிக்கை, வளர்ந்து வரும் பொருளாதார மந்த நிலை மற்றும் பணவீக்கம் ஆகியவை காரணமாக வேலை நீக்கம் செய்யப்படுவதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்து இருந்தார்.

திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நிலை என்ன என்பதை அப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் இருந்து வேலையிலிருந்து நீக்கப்பட்ட நிக்கோல் சாய் என்பவர் காலை தூங்கி எழுந்த போது ஒரு குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கூகுள் நிறுவனத்தில் இருந்து 12000 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது தான் அந்த குறுஞ்செய்தி. உடனடியாக அந்த 12000 பேர்களில் தானும் ஒருவரா? என்பதை அறிய தனது லேப்டாப்பை எடுத்து அவர் கூகுள் நிறுவனத்தின் ஐடியை லாகின் செய்ய முயன்ற போது அவரால் லாகின் செய்ய முடியவில்லை. இதனை அடுத்து அவர் தானும் வேலை நீக்கம் செய்யப்பட்டோம் என்பதை அறிந்து கண்ணீர் விட்டார்.

கூகுள் நிறுவனத்தில் பல வருடங்களாக வேலை செய்த நிலையில் தற்போது திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டதை அறிந்ததும் அவர் அதிர்ச்சிக்கு எல்லையே இல்லை. இதனை அடுத்து அழுது கொண்டே அவர் தன்னை போல் யார் யாரெல்லாம் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதை லிங்க்ட்-இன் பக்கத்தில் போய் பார்த்தார். வேலையிழந்த அனைவரும் சோகமாக இருப்பதை கண்டு கொண்டார். அவரால் கண்ணீரை அடக்கவே முடியவில்லை, எதிர்காலம் ஒரு பெரிய கேள்விக்குறியாக இருந்த நிலையில் இப்படியே அழுது கொண்டிருந்தால் சரியாக வராது, உடனடியாக நமது மனநிலையை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்.

இதனையடுத்து அவர் பூமியின் சொர்க்கம் என்று கூறப்படும் லாஸ் ஏஜென்ஸில் நகரில் உள்ள டிஸ்னிலேண்டுக்கு சென்றார். அங்கு அவர் இன்பமாக தனது பொழுதையை ஒரு நாள் முழுதும் செலவு செய்தார். தனக்கு வேண்டிய விருப்பமான உணவுகள் எல்லாம் வாங்கி சாப்பிட்டார். இது குறித்த வீடியோவை அவர் பதிவு செய்துள்ளார். இன்று நாம் எதிர்கொள்ளும் பொருளாதரத்தை சிக்கலை சந்திக்க உடனடியாக ஒரு மனமாற்றம் முக்கியம், எதையும் சந்திக்க நமது மனதை தயார்படுத்த கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?