Connect with us

இந்தியா

தூக்கத்தினால் இறங்க வேண்டிய ஸ்டெஷனை தவறவிடும் நபரா நீங்கள்? உங்களுக்காக ரயில்வேதுறையின் புதிய வசதி

Published

on

ரயில் பயணத்தின்போது தூங்குவதால் நாம் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தவறவிடுவதை தவிர்ப்பதற்காக வேக்கப் கால் என்ற வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி ரயில் பயணிகளுகு மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது

இரவு நேரத்தில் பர்த் சீட்டில் தூங்கும் போது சில பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தூக்கத்தினால் தவற விட்டு விடுவதாக பல செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் ரயில் பயணத்தின்போது தூக்கத்தினால் தங்களது ரயில் நிலையத்தை தவற விடுபவர்களுக்கு இந்திய ரயில்வே அசத்தலான திட்டமொன்றை செயல்படுத்தி வருகிறது

இதற்காகவே வேக்கப்கால் என்ற திட்டத்தை இந்தியன் ரயில்வே கொண்டு வந்துள்ளது. இந்த சேவை மூலம் நாம் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வருவதற்கு 20 முன்பு நிமிடங்களுக்கு முன்பே ரயில்வே நிர்வாகம் உங்களை கால் செய்து எழுப்பிவிடும். இந்த வசதியை செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்

* உங்கள் மொபைல் ஃபோனிலிருந்து IRCTC உதவி எண்ணான 139ஐ அழைக்கவும்.

* அழைப்பு இணைக்கப்பட்டதும், உங்களுக்கு தெரிந்த மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

* அதன் பிறகு எந்த தொலைபேசி எண்ணுக்கு வேக் அப் கால் அலெர்ட் கொடுக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்

* அதனைத் தொடர்ந்து உங்களுடைய 10 இலக்க PNR எண்ணை பதிவிட்டு, 1-ஐ அழுத்தி உறுதிப்படுத்த வேண்டும்.

இதை செய்தால் போதும், நீங்கள் நிம்மதியாக தூங்கலாம்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?