Connect with us

இந்தியா

ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு.. கடவுள் அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்..!

Published

on

ரயில்வே நிலையம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கடவுள் அனுமனுக்கு ரயில்வே அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மொரோனா என்ற மாவட்டத்தில் ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ரயில்வே துறை சமீபத்தில் கடவுள் அனுமானுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பின்னர் அந்த நோட்டீஸ் வைரல் ஆனதை அடுத்து தவறை உணர்ந்த அதிகாரிகள் அந்த நோட்டீசை வாபஸ் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

மத்திய பிரதேசம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் சமீபத்தில் ரயில்வே நிலம் அனுமான் கோயிலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து இந்த நோட்டீஸ் கண்ட ஏழு நாட்களுக்குள் ரயில்வே ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்றும் ரயில்வே துறை எச்சரிக்கை விடுத்து அனுமான் கோயிலுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அது மட்டுமின்றி இந்த நோட்டீஸ் அனுமான் கோயிலில் வாசலிலும் ஒட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதன் பின்னர் தவறை உணர்ந்த அதிகாரிகள் அந்த நோட்டீசை வாபஸ் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பதிகாரி மனோஜ் என்பவர் கூறுகையில், ‘முதல் கட்ட அறிவிப்பு தவறுதலாக வழங்கப்பட்டது என்றும் அதன் பிறகு ரயில்வே நிலம் உண்மையிலேயே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் இரண்டு நாட்களுக்கு பின்னர் புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கடந்த டிசம்பரில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்தது. தாஜ்மஹாலுக்கு வீட்டு வரியாக ரூ.1.47 லட்சத்தையும், தண்ணீர் வரியாக ரூ.1.94 கோடியையும் செலுத்துமாறு இந்திய தொல்லியல் துறையிடம் கேட்டு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் நிலுவைத் தொகையை செலுத்த 15 நாட்களுக்குள் செலுத்தவில்லை என்றால் தாஜ்மஹால் ஜப்தி செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. அதன்பின்னர் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்களுக்கு வரி, தண்ணீர் வரி கிடையாது என்பதை உணர்ந்து நோட்டீஸை வாபஸ் பெற்றது.

வணிகம்15 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?