சினிமா செய்திகள்
சீமான் மகனுக்கு வாழ்த்து கூறி கவிதை எழுதிய வைரமுத்து
சீமான் மகனுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துக் கூறி கவிதை எழுதி உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடந்த 2013ஆம் ஆண்டு முன்னாள் அதிமுக அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் சீமானின் மகன், வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில் சீமான் மகனுக்கு வாழ்த்து தெரிவித்து வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை எழுதி உள்ளார். அந்த கவிதைகள் அவர் கூறியிருப்பதாவது:
காளிமுத்து பேரன்
செந்தமிழன் சீமானின்
திருச்செல்வன் மாவீரன்
தமிழாற்றுப்படையோடு
உறவாடி விளையாடும்
ஒளிப்படங்கள் கண்டேன்
நாளையொரு பூமலர
நல்லதமிழ்த் தேன்சிதற
வாழையடி வாழையென
வளருமடா தமிழ்க்கூட்டம்
என்று வாய்விட்டுச்
சொல்லிக்கொண்டேன்
தமிழாற்றுப்படையோடும்
தமிழர் படையோடும்
வா மகனே!