ஆரோக்கியம்
பெண்களில் புறக்கணிக்கக் கூடாத மாரடைப்பின் மறைமுக அறிகுறிகள்!

பெண்களில் புறக்கணிக்கக் கூடாத மாரடைப்பின் மறைமுக அறிகுறிகள்!
உலகளவில் அதிக உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருப்பது மாரடைப்பு தான். இந்தியாவில் மட்டும் தினசரி சராசரியாக 448 பேர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. இதில் ஆண்களை விட பெண்களின் இறப்பு எண்ணிக்கை அதிகம் என்பதும் கவலைக்குரியது.
American Heart Association தரவுப்படி, பெண்கள் பெரும்பாலும் மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகளை அமில ரிஃப்ளக்ஸ் அல்லது சாதாரண காய்ச்சல் என தவறாக கருதி புறக்கணிக்கின்றனர். இதன் காரணமாக சரியான சிகிச்சை பெறாமல் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.
பெண்களிடம் தோன்றும் மாரடைப்பின் அறிகுறிகள் ஆண்களிடம் காணப்படும் வழக்கமான மார்பு வலியிலிருந்து மிகவும் வித்தியாசமானவை. எனவே அவற்றை அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.
பெண்களிடம் தோன்றும் அசாதாரண மாரடைப்பு அறிகுறிகள்:
மார்பில் அழுத்தம் அல்லது நிறைவு உணர்வு – பெண்களுக்கு மார்பின் நடுப்பகுதியில் வலி தோன்றலாம், ஆனால் இடது பக்கம் எப்போதும் தெரியாமல் போகலாம்.
மேல் உடல் வலி – கைகள், முதுகு, கழுத்து, தாடை, வயிற்று ஆகிய இடங்களில் வலி அல்லது அசௌகரியம் தோன்றலாம். சில நேரங்களில் தூக்கத்திலேயே வலி ஏற்பட்டு எழுப்பிவிடும்.
வயிற்று வலி – பெண்களுக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் அல்லது காய்ச்சல் போல் உணரப்படும் வயிற்று வலி, உண்மையில் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
மூச்சுத் திணறல் – மார்பு வலியுடன் அல்லது இல்லாமல் மூச்சு விட சிரமம் ஏற்படுவது மாரடைப்பின் முக்கிய எச்சரிக்கை அறிகுறி.
குளிர் வியர்வை மற்றும் குமட்டல் – காரணமில்லாமல் குளிர் வியர்வை, தலைச்சுற்றல், குமட்டல் ஆகியவை தோன்றினால், உடனடியாக மருத்துவ உதவியை பெறுவது அவசியம்.



















