Connect with us

உலகம்

ஆப்பிள் ஸ்டோரில் பட்டப்பகலில் திருடிய மர்ம மனிதர்கள்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!

Published

on

ஆப்பிள் ஸ்டோரில் இருந்து மர்ம நபர்கள் பட்டப்பகலில் திருடிக் கொண்டு இருந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக திருட்டு என்பது இரவில் கடை மூடிய பின் நடக்கும் என்பதும் அல்லது கடை திறந்திருக்கும் போது துப்பாக்கி முனையில் நடக்கும் என்பதும் தெரிந்ததே. ஆனால் கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஆப்பிள் ஸ்டோரில் பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் நடந்து கொண்டிருந்தபோது திடீரென 2 மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கடைக்குள் நுழைந்தனர்.

அவர்கள் அந்த கடையில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் தாங்கள் கொண்டு வந்த பையில் எடுத்து வைத்தனர். ஒருசில வாடிக்கையாளர்கள் கையில் வைத்திருந்த பொருட்களையும் திருடினர். மேலும் சில பொருட்களை கீழே போட்டு உடைத்தனர்.

அப்போது அந்த கடையில் இருந்த ஊழியர்கள் அல்லது பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் எதுவும் சொல்லாமல் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். யாராவது ஒருவராவது அந்த திருடர்களை எதிர்த்து கேள்வி கேட்பார் என்று பார்த்தால் ஒருவர் கூட கடைசி வரை பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த போதுதான் அந்த திருடர்கள் பொருள்களோடு ஓட தொடங்கினர் என்பதும் கடைசியில் அவர்கள் ஒரு சந்து வழியாகச் சென்று மாயமாய் மறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் கடும் கோபத்தில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். திருடர்கள் கையில் ஆயுதம் இருந்ததாக சிசிடிவி காட்சியில் தெரியவில்லை. இரண்டு மர்ம நபர்கள் திருடி கொண்டிருக்கும்போது பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எந்த விதமான மனநிலை என்பது தெரியவில்லை என்று கூறி வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?