Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை 16 சிறப்பு ரயில்கள் ரத்து: மெட்ரோ ரயில் இயங்குமா?

Published

on

உலகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை அடுத்து நாளை முழு ஊரடங்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கை அடுத்து 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை மற்றும் மே இரண்டாம் தேதி முழு ஊரடங்கு என்பதால் இந்த இரண்டு நாட்களிலும் 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் திருச்சி-காரைக்குடி சிறப்பு ரயில், மதுரை-விழுப்புரம் சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை-புதுச்சேரி, திருச்சி-கரூர் வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் நாளை ரயில் நிலையங்களில் முன்பதிவு நிலையங்களும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை முழு ஊரடங்கு இருந்தாலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் மருத்துவர்கள் காவல்துறையினர் நர்சுகள் மருத்துவ ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணி ஊழியர்களுக்காக இந்த ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?