இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.08.2026

- உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த “வெங்காய எக்ஸ்பிரஸ்“ என்ற சிறப்பு ரயில்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. நாசிக்கில் இருந்த டெல்லி, சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு வெங்காயத்தை எடுத்துச் செல்ல “கந்தா எக்ஸ்பிரஸ்“ என்ற சிறப்ப ரயில்இயக்கப்படகிறது. கந்தா என்றால் மராத்தி மொழியில் வெங்காயம் என்று பொருள்.
- இன்றைய தங்கம் விலை மாற்றமின்றி கிராம் ரூ.15010க்கும் சவரன் ரூ.120080க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.265க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.265000க்கும் விற்பனை ஆகிறது.
- உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்களின் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படவதால் குடியேற்ற விசா விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு நேர்காணல் தேதிகள் தள்ளிவைக்கப்படவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி முடங்கும் அபாயம்! தமிழகத்தில் அரசு கேபிள் டிவி செட்-டாப் பாக்ஸ்களை ரீசார்ஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆபரேட்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், அரசு கேபிள் டிவி சேவை தொடர்ந்து இயங்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமி தினமான நாளை அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதல் முன்திவு வில்லைகள் ஒதுக்கீடு செய்து பத்திரப்பதிவுத்துறை தகவல்.
- அமேசான், ஸ்விகி, உரிமங்கள் சஸ்பெண்ட். – விஷத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் மற்றம் விதைகளை ஆன்லைனில் விற்றதால் அமேசான், ஸ்விகி இன்ஸ்டதமார்ட், பிக்பாஸ்கெட் ஆகிய நிறுவனங்களின் உணவு உரிமங்களை சஸ்பெண்ட் செய்து கர்நாடக உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை. இப்பொருட்களை உடனடியாக விற்பனையிலிருந்து நீக்கவும் உத்தரவு.
- 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றம்! கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்களும் அருகில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை சிஐடி விசாரணைக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தீவிரமடைந்துள்ளது.
- தமிழ் வழியில் படித்தோருக்கு அரசுப் பணிணில் 20மூ ஒதுக்கீடு வழங்கும் வகையிலான சட்டத்திருத்த்த்த்தின் மசோதாவுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல். இந்த மசோதா கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
- டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்! சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார். டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், சுமார் 400 பேர் அடங்கிய உயர்நிலைக் குழுவுடன் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணம் இந்தியா–சீனா உறவுகளில் முக்கிய கவனம் பெற்றுள்ளது.
- தமிழகத்தில் 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.











