இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

- ரேஷன் கடைகளில் முக அங்கீகார முறை! முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக Face Authentication வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரூ.50 லட்சம் செலவில் முதற்கட்டமாக 150 நியாய விலைக் கடைகளுக்கு இந்த இயந்திரங்கள் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் வெங்கடரமணன் அறிவிப்பு.
- செப்டம்பர் 1 முதல் படப்பிடிப்பு நிறுத்தம். புதிய படங்கள் எதுவும் வெளியாகாது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் அறிவிப்பு.
- மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் அக்டோபர் 2 முதல் விரிவாக்கம் செய்யப்படும். மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, Deluxe அரசுப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.
- ஆண்டு வருமானம் ரூ.2,50,000 வரை உள்ளவர்களுக்கு மட்டும் (மாத வருமானம் ரூ.20,833) அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிப்பு.
- மகளிர் பயணத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டால் தனியார் போக்குவரத்து சம்மேளத்தினர் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் குறிப்பிட்டு வேலை நிறுத்தம் செய்ய முடிவு.
- கொளத்தூர் தொகுதி தோல்வியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு.
- .சென்னையில் ஆலந்தூர், மத்திய பணிமனை, பெரம்புர் உள்ளிட்ட மூன்று போக்குவரத்து பணிமனைகளையும் தனியார்மயமாக்கம் தவெக அரசின் முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு.
- ஈரான் நாட்டிற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக புதிய பிரமாண்ட இயற்கை எரிவாயு புலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து கிராம் ரூ.15010க்கும் சவரன் ரூ.120080க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து கிராம் ரூ.265க்கும் ஒரு கிலா பார்வெள்ளி ரூ.265000க்கும் விற்பனை ஆகிறது.
- சமீபத்தில் உச்சநீதிமன்றம் மேகமலை புலிகள் காப்பக எல்லைக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆகஸ்ட் 28-க்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கத் தவறினால் “துணை ராணுவப் படையைப்” பயன்படுத்த நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. தமிழக அரசு 4,600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசிப்பதாகத் தெரிவித்து கூடுதல் அவகாசம் கோரியுள்ளது..
- இந்தியாவில் பொதுவாக நவராத்திரி தொடங்கும் காலத்தில் பண்டிகை தேவையால் சர்க்கரை விலை உயர்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே சர்க்கரை விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சர்க்கரை இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











