Connect with us

சினிமா

தியேட்டருக்கு 100 சதவீத இருக்கைக்கு அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு…

Published

on

theatre

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு பரவ துவங்கியது. ஏப்ரல் மே மாதங்களில் அது இன்னும் அதிகரித்தது.

எனவே, தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா படிப்படியாக குறைந்தது.

தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரமாக இருந்த நிலையில், அது படிப்படியாக குறைந்து 2 ஆயிரத்திற்கும் கீழே சென்றது. ஆனாலும், தனியார் பார்கள் செயல்பட அனுமதி மறுப்பு, பேருந்துகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி, கேரள மாநிலத்திற்கு பேருந்து செல்ல அனுமதி மறுப்பு என சில கட்டுப்பாடுகள் அமூலில் இருந்தது.

குறிப்பாக, பல மாதங்களுக்கு பின் தியேட்டர்கள் திறக்கப்பட அனுமதிக்கப்பட்டாலும் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி இருந்தது. இது தயாரிப்பாளர்களுக்கு அதிருப்தியை கொடுத்தது. தற்போது தீபாவளிக்கு அண்ணாத்த, எனிமி போன்ற படங்கள் வெளியாகவுள்ள நிலையில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்றால் மல்டிபிளக்ஸ் போன்ற தியேட்டர்களில் லாபத்தை ஈட்ட நாட்கள் ஆகும் என கலக்கத்தில் இருந்தனர்.

இந்நிலையில், சில கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் சில முக்கிய அறிவிப்புகள் வெளியானது.

இதில் நவம்பர் 1ம் தேதி முதல் திரையங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம் என அரசு கூறியுள்ளது. இது தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க அதிபர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?