Connect with us

தமிழ்நாடு

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்.. விண்ணப்பிப்பது எப்படி?

Published

on

சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த இலவச தையல் இயந்திரத்தைச் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்களான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள்,புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் இனத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பித்துப் பெறலாம்.

இந்த தையல் இயந்திரம் பெற விண்ணப்பிப்பவர்கள் வயது 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். தையல் கலை பயின்றதற்காகச் சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும்.

கணவரால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண் உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் கீழே இணைப்பில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம்: https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/Application-form-for-the-free-supply-of-Sewing-Machines.pdf

இலவச தையல் இயந்திரம் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் போது இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

1) வயதுச் சானிற்தழ்
2) இருப்பிடச் சான்றிதழ்
3) வருமானச் சான்றிதழ் (ஆண்டு வருமானம் 12,000 ரூபாய்க்கும் கீழ் என குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்)
4) அனுபவ சான்று
5) சாதி சான்றிதழ்
6) உடல் ஊனமுற்றோர் சான்றிதழ்
7) கணவனால் கைவிடப்பட்ட அல்லது உதவி சான்றிதழ்
8) ஆதார் அட்டை நகல்
9) அலைப்பேசி எண்
10) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
11) கையொப்பம் இடப்பட்ட விண்ணப்பம்

முக்கிய விதிகள்

1) விண்ணப்பிக்கும் நபர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்
2) முகவரி தமிழ்நாடு வீட்டு முகவரியாக இருக்க வேண்டும்.
3) ஆண்டு வருமானம் 12,000 ரூபாய் என வருமான சான்றிதழில் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.
4) தையல் கலை பயின்றதற்காகச் சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும்

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?