இந்தியா
நீதிமன்றம் உத்தரவிட்டும் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள்: திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு!
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மத சம்பந்தப்பட்ட அடையாளங்களுடன் மாணவ, மாணவிகள் வரக்கூடாது என்றும் ஹிஜாப் அணிவது குறித்து நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை கர்நாடக மாநில அரசின் உத்தரவு படி சீருடையில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்றும் சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை மீறி நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் ஹிஜாப் அணிந்து பல மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் அனுமதிக்கவில்லை என்ற நிலையில் மாணவர்கள் மற்றும் அவருடன் வந்த பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிஜாப் அணிவது குறித்த நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பள்ளியின் கட்டுப்பாட்டின் படி சீருடையில் வர வேண்டும் என்ற அடிப்படை நியதியை கூட பின்பற்றாமல் இருக்கும் மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு சமூகவலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.