Connect with us

இந்தியா

கடும் டிராபிக் நெருக்கடி.. தேசிய நெடுஞ்சாலையில் 2 கிமீ ஓடிய தேர்வு எழுதும் மாணவிகள்..!

Published

on

கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்ட மாணவிகள் பொது தேர்வு எழுதும் அறைக்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் இரண்டு கிலோமீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஒவ்வொரு மாணவ மாணவியர்களுக்கும் பொது தேர்வு என்பது அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியம் என்பதும் அந்த பொது தேர்வை மிஸ் செய்யாமல் எழுத வேண்டியது ஒவ்வொரு மாணவர்களின் கடமை என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் பொது தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் பொதுத்தேர்வு எழுதுவதற்காக மாணவிகள் போக்குவரத்து பேருந்துகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நின்று விட்டதால் தேர்வு நேரம் நெருங்கியதால் மாணவிகள் பதட்டம் அடைந்தனர்.

மாணவிகள் தங்கள் தேர்வு மையத்தை நோக்கி சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக நெடுஞ்சாலையில் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் தரம் குறித்தும் டிராபிக் குறைபாடுகள் குறித்தும் நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை 2 பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறித்து கடந்த ஒரு வாரமாக புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பொது தேர்வு எழுத வரும் மாணவ மாணவியர்களுக்கு எந்த விதமான வசதியும் செய்து தரவில்லை என கல்வித்துறை மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர் மாணவிகளை மன அழுத்தத்திற்கு ஏற்படும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?