Connect with us

சினிமா

STR48: ஜோடி சேரும் மூன்று கதாநாயகிகள்?

Published

on

’பத்துதல’ படத்திற்கு அடுத்து நடிகர் சிலம்பரசனின் படத்தில் நடிக்க இருக்கும் கதாநாயகிகள் குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்திருக்கக்கூடிய ‘பத்துதல’ திரைப்படம் இந்த மாதம் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற இதன் இசை வெளியீட்டு விழாவில் கூட தனது ரசிகர்கள் இனிமேல் தன்னிடம் இருந்து நல்ல படங்களை எதிர்பார்க்கலாம் என சிலம்பரசன் சொல்லி இருந்தார். அந்த வகையில், ‘பத்துதல’ படத்திற்கு அடுத்து நடிகர் சிலம்பரசன் நடிக்க இருக்கும் 48வது படம் குறித்தான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ’ப்ளட் அண்ட் பேட்டில்’ என்ற டேக்கோடு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.

இந்தக் கதையில் நடிகர் சிலம்பரசன் ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள தகவல்படி கதையில் மூன்று கதாநாயகிகளை நடிக்க வைக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக, நடிகைகள் ராஷ்மிகா மந்தானா, பூஜா ஹெக்டே மற்றும் திஷா பட்டானி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?